mercredi 11 mai 2011

Vijay’s next is a mass entertainer


Director Ameer, who is currently busy with Aadhi Bhagwan, is all set to begin the groundwork for his next venture. This time around he has roped in Illayathalapathi Vijay to play the protagonist in his film.
The film is titled Kannabiran. The script is designed to suit Vijay’s mass image it is revealed.
Director Ameer who has worked with top actors like Suriya, Karthi, Jiiva has now managed to convince Vijay for his latest venture.
Further news on this project is awaited.


Tags Vijay, Kannapiran

mardi 10 mai 2011

பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது ஏன்...? பரபரப்பு தகவல்கள்

பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் (ஜெயமோகனின் 7வது உலகம் தான் பாலாவின் நான் கடவுள் படம்) பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுத ஒத்துக் கொண்டு, ஞாபகங்கள் கொண்ட கதையை, சில கற்பனை பாத்திரங்கள் சேர்த்து 3 மணி நேர கதையாக்கும் வகையில் வசனங்கள் எழுதி முடித்திருந்தார்.

இதன் கதை நட்சத்திரங்களாக, தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு, நம் இளைய தளபதி விஜய், பார்த்திபன், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா உள்ளிட்ட பிரபலங்கள் தேர்வு செய்த நிலையில், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் வகையில் அத்தனை ஏற்பாடுகளும் முடக்கி விடப்பட்ட நிலையில், இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் மணிக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் மூலம், ராணாவுக்கும், பொன்னியின் செல்வன் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விபட்ட மணி, சூப்பர் நடி‌கரை சந்தித்து இருக்கிறார்.(பொன்னியின் செல்வன் தமிழக அரசின் பொது உடைமை ஆக்கப்பட்ட கதை. யார் வேண்டுமானாலும் கதையை ப‌யன்படுத்தலாம்)

இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள சில முக்கியமான திருப்பங்களும், சம்பவங்களும், ராணாவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது இயக்குநர் மணிக்கு. இதனால் ராணா ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மணி சார் இயக்கத்தில் படம் வெளி வர குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஆகும் என்பதாலும் பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டுள்ளது. படம் கைவிடப்பட்டது குறித்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தேர்வு செய்த நட்சத்திரங்களை வைத்து அடுத்து படம் இயக்குவதற்காக முயற்சியில் இருக்கிறார் மணிரத்னம். 




Tags Vijay, Ponniyin Selvan , Veerudu

Vijay fans protest against Sri Lanka president



ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி நடிகர் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரத போராட்டம்.



இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற போரில், அப்பாவி ஈழத் தமிழர்களை இரக்கமே இல்லாமல் சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இதுபற்றி விசாரணை நடத்திய ஐ.நா.சபையின் விசாரணைக்குழு இலங்கை போரில் போர்விதிகளை கடைபிடிக்காமல் போர்க்குற்றம் புரியப்பட்டு உள்ளதாக அறிக்கை அளித்தது.
அதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும், அவர் மீது சர்வதேச

கோர்ட்டில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நடைபெற்றது. சேலம் மாவட்ட இளைய தளபதி விஜய் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் தமிழன்.ஆ.பார்த்திபன் இந்த உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தின் இடையிடையே மன்ற முக்கிய நிர்வாகிகள் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள்.

In English :

Vijay fans protest against Sri Lanka president.



Actor Vijay’s fans held protest demonstration in Salem demanding the arrest of Sri Lankan President Mahinda Rajapakse for the ‘war crimes’ he had allegedly committed during the all-out offensive launched by the Lankan government against LTTE. In the name of ‘offensive’, what Rajapakse indulged in was nothing but ‘genocide’ of Lankan Tamils, the fans said.

The Lankan president has been accused of committing war crimes against Tamils by U.N. and the international community; he should be arrested at once and his trial should take place in the International Court of Justice,” the fans raised slogans against the Lankan president.

The protest march was led by Parthiban, head of Vijay Fans’ Club in Salem District. Fans numbering more than 500 participated in the protest. After raising slogans, the fans dispersed, announcing promptly that the next level of protest would be planned in a ‘grand’ and large scale.




Tags Vijay

lundi 9 mai 2011

பொன்னியின் செல்வன் டிராப் சந்தோஷப்பட்ட ஹீரோ?

பொன்னியின் செல்வன் டிராப் ஆனதில் ஒரு ஹீரோவுக்கு ரொம்ப ரொம்பசந்தோஷமாம். இந்த செய்தி நெட்டில்தான் முதலில் வந்தது. இதை படித்த அடுத்த வினாடியே முக்கியமான நிருபர்களுக்கு போன் அடித்தார் அவர். சார்... நான் ஒரு நியூஸ் படிச்சேன். நெசம்தானா அது? கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்களேன். இப்படி பலருக்கும் போன் போட்டு, ஆமாம். நிஜம்தான் என்று கேள்விப்பட்டதும்தான் நிம்மதியாக து£ங்க போனாராம்.

அதற்கும் ஒரு காரணம் இருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வெகு காலமாகவே இருக்கிறது. சரித்திரக்கதைக்கு பொறுத்தமாக அகண்ட தோள்கள். அரிவாள் மீசையெல்லாம் கூட இருக்கிறது. இதே டைப் படம் ஒன்றிலும் சமீபத்தில்தான் நடித்து முடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விஜய், மகேஷ்பாபு என்று பலரையும் அழைக்கிற அவர், தன்னை அழைத்தால் என்ன? என்ற ஏக்கமும் இருந்ததாம். ஆனால் கடைசிவரை அந்த நல்ல செய்தி அவரை எட்டவே இல்லை.

அப்புறம் என்ன? இந்த படம் டிராப்பானால் அவரை விட சந்தோஷப்படுகிறவர்கள் யாராக இருக்க முடியும்? இன்னுமா புரியவில்லை யார் அந்த நடிகரென்று? நம்ம பிரசாந்தேதான்.

Translate By Vasan 



Actor Prashanth is overjoyed with the drop of Ponniyin Selvan. It is revealed that Prashanth had a dream to act in a Maniratnam movie, but he couldn't make his wish as soon as Vijay and Mahesh Babu was selected for the project. Recently the...re were rumours flying around the internet, stating that Manratnam's Ponniyin Selvan has been dropped. As soon as Prashanth heard this, he was overjoyed with the news, says the source. 


Tags Vijay, Ponniyin Selvan , Veerudu



Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...