
நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமயம் வரும்போது அதுகுறித்து அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். அதேசமயம், சமீபத்தில் டெல்லி போய் ராகுல் காந்தியையும் சந்தித்தார். இதனால் அவர் காங்கிரஸில் சேருவாரோ என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் காங்கிரஸில் சேரும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதற்டையில் கடந்த வாரம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென அழைத்துப் பேசினார். தொகுதிகளில் உள்ள செல்வாக்கு, தனி கட்சி துவங்கலாமா அல்லது வேறு கட்சியில் இணையலாமா? புது கட்சி துவங்கினால் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்றெல்லாம் கருத்து கேட்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மை நிர்வாகிகள் தனிக்கட்சி துவங்க வலியுறுத்தினார்கள். மேலும் பொங்கலுக்கு முன்பே புதுக் கட்சியை அறிவித்து விடுங்கள் என்றும் விஜய்யை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதைவிட முக்கியம், விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் போயஸ் கார்டனில் இப்போதே பரபரப்பாக நிருபர்கள் குழும ஆரம்பித்துள்ளனர்.
அரசியல் வானில் அடுத்த நட்சத்திரம். ‘சூரியனின்’ வெப்பத்தில் சிக்கி ‘உருகுமா’ அல்லது ‘உதைக்குமா’ என்பது போகப் போகத்தான் தெரியும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire