lundi 21 mars 2011

சிங்கள புத்த பிக்குவாக புரட்சித் தமிழன் சத்யராஜ்! - இது பொன்னியின் செல்வன் அதிரடி


பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் சத்யராஜ்.Sathyarajஒரு காலத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கதைதான் பொன்னியின் செல்வன். ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் அது முடியாமல் போனது. அப்புறம் அதே கனவோடு சில முயற்சிகள் செய்தார் கமல். அதுவும் இஞ்ச் கூட நகரவில்லை. இப்போது மணிரத்னம்! ஆனால் முந்தைய ஜாம்பவான்களின் முயற்சியை இவர் அசால்ட்டாக கையாண்டு கொண்டிருக்கிறார் என்பதுதான் இன்ப அதிர்ச்சி.
விஜய், மகேஷ்பாபு, ஆர்யா, அனுஷ்கா, என்று நாள்தோறும் ஒரு நட்சத்திரத்தை தன் வலையில் பிடித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் லேட்டஸ்ட்டாக ஒப்பந்தம் செய்திருப்பது சத்யராஜைதான். இந்த படத்தில் புத்த பிக்குவாக நடிக்கிறாராம் அவர்.
சிங்கள சாமியார்களைதான் புத்த பிக்குகள் என்பார்கள். பொன்னியின் செல்வனில் மிக முக்கியமான பாத்திரம் இந்த புத்த பிக்கு. அடிப்படையில் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து வரும் சத்யராஜ் (இவர் மட்டுமா, சுரணையுள்ள எல்லா தமிழர்களும்தான்) இந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே வியப்பான விஷயம்தான்!



Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...