mardi 12 avril 2011

படப்பிடிப்புகள் ரத்து: ரஜினி,கமல்,விஜய்,அஜீத், ஓட்டு போடுகின்றனர்


தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. நடிகர், நடிகைகள் பலர் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர். இதற்காக சிலர் வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
ரஜினிகாந்த் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஓட்டு போட்டு வருகிறார். இம்முறையும் “ராணா” படப் பிடிப்புக்கு இடையில் நாளை ஓட்டுப் போடுகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கான வாக்கைப் பதிவு செய்கிறார்.
நடிகர் கமல் ஆழ்வார் பேட்டையில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகிறார்.தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சாலி கிராமத்தில் வசிக்கிறார். இது விருகம்பாக்கம் தொகுதியில் வருகிறது. அவர் சாலி கிராமம் ஆவிச்சி பள்ளியில் ஓட்டு போடுகிறார்.
சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தியாகராயநகர் இந்தி பிரச்சார சபா வாக்குச் சாவடியில் ஓட்டு போடுகின்றனர். இதே வாக்குச்சாவடியில் சிவக்குமார், கார்த்தி ஆகியோரும் ஓட்டு போடுகிறார்கள்.
நடிகர் அஜீத்தும் அவரது மனைவி ஷாலினியும் திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகின்றனர். அடையார் பாரத் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் ஓட்டு போடுகிறார்.


Tags Vijay , Velayutham


Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...