vendredi 15 avril 2011

மீண்டும் தமிழுக்கு வரும் பிரியங்கா சோப்ரா


தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா, அப்படம் சரியாக போகாததால் பின் தமிழ்நாட்டு பக்கமே வரவில்லை.
பல வருடங்கள் கழித்து அவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் மணிரத்னம். இவர் இயக்கவிருக்கும் "பொன்னியின் செல்வன்" படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம் பிரியங்கா.
இன்னொரு முக்கிய ரோலில் தான் அனுஷ்கா நடிக்கிறார். இவர்கள் போக திடீரென்று படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் முக்கியஸ்தர் ராஜ்கிரண். இவருக்கு என்ன கேரக்டர் என்பதை கூட சொல்லவில்லையாம் மணிரத்னம்.


பொன்னியின் செல்வனில் நடிக்கிறீங்களா என்று மட்டும் கேட்டாராம். மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் என்பதே ராஜ்கிரணுக்கு பெருமை சேர்க்கிற விடயம் தானே? சரி என்று கூறிவிட்டாராம். மற்ற விடயங்களையெல்லாம் இனிமேல் தான் பேசுவார்கள்.



English summary
Priyanka Back in Kollywood.She Already Doing Thamizhan Movie With Vijay. Now She Will Do One Infortant Role In Ponniyin Selvan. Also Rajkiran Do One infortant Role. 

Tags Vijay, Ponniyin Selvan , Veerudu


Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...