lundi 22 novembre 2010

3 இடியட்ஸ்-வருத்தத்தில் மகேஷ் பாபு!


ஒருவழியாக “3 இடியட்ஸ்” டீம் தயாராகிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகப் போகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 5 ந் தேதி டேராடூனில் தொடங்குகிறது. அங்குள்ள என்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் ஷூட்டிங் வைத்திருக்கிறார் ஷங்கர். மொத்தம் பதினொரு நாட்கள் நடக்கப் போகும் இந்த ஷூட்டிங்கில் படம் தொடர்பான அத்தனை நட்சத்திரங்களும் இருக்கப் போகிறார்களாம்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இவர்களுடன் இலியானாவும் நடிக்கிறார். தெலுங்கு பதிப்பில் விஜய்க்கு பதிலாக மகேஷ்பாபு நடிக்கிறார். இவர்கள் அத்தனை பேருமே டிசம்பர் 5 ல் டேராடூனில் இருப்பார்களாம்.  மகேஷ் பாபுவுக்கு மட்டும் சின்ன வருத்தமாம். விஜய் தவிர இந்த படத்தில் நடிக்கவிருக்கும் இரண்டு நட்சத்திரங்களும் தெலுங்கில் அவ்வளவு பரிச்சயமில்லை. அவர்களுக்கு பதிலாக தெலுங்கில் இருந்தே இரண்டு பெரிய ஸ்டார்களை புக் பண்ணியிருக்கலாமே என்பதுதான் அந்த வருத்தம்.தமிழ் தனி, தெலுங்கு தனி என்று படப்பிடிப்பு நடப்பதால் இவர் சொன்ன யோசனை நியாயமானதுதான் என்கிறார்கள் தெலுங்கு ஏரியாவில்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...