samedi 27 novembre 2010

ஷங்கர் மீது கடுப்பான கௌதம் மேனன்!

கௌதம் மேனன் இப்போது செம டென்ஷனில் இருக்கிறார் என்கிறார்கள் அவரது அலுவலக வட்டாரத்தில். என்ன நடந்தது அப்படி? லண்டன் பங்குச் சந்தையில் அவரது நிறுவனத்தின் பங்கு விலை குறைந்துவிட்டதா என்ன?

அதுதான் இல்லை. தனது ஆஸ்தான ஒளிபதிவாளர் மனோஜ் பரமஹம்சாவை விண்ணைத் தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக், சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகிய படங்களுக்காக வாய்மொழியாக புக் செய்து வைத்திருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் மனோஜ் பரம ஹம்சாவுக்கு ஒரு போனைப் போட்டு கூப்பிட்ட இயக்குனர் ஷங்கர். “3 இடியட்ஸ் ரீமேக்கில் பணி புரிய விருப்பமா?” என்று கேட்க மறு பேச்சிலாமால் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் முறையாக கௌதம் மேனனை சந்தித்து “இந்த வாய்ப்பைக் கை நழுவவிட முடியாது. ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மீண்டும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது” என்று முகத்துக்கு நேராகச் சொல்லிவிட்டாரம். டென்ஷனான கௌதம் “என்னை ஷங்கரை விடக் குறைவாக மதிப்பிடுகிறீர்களா?” என்று கேட்டு கத்திவிட்டாராம்.

இறுதியில் மனோஜை வாழ்த்தி அனுப்பிய கௌதம், நேரம் வரும்போது ஷங்கரிடம் வைத்துக்கொள்கிறேன் என்று கறுவியபடி திரிவதாகத் தகவல்கள் வருகின்றன.
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...