3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் இருந்து விஜய் வெளியேறிய செய்தியின் சூடு ஆறுவதற்குள் அடுத்து அதிர்ச்சியை அளித்திருக்கிறார் தெலுங்கு நட்சத்திரம் மகேஷ் பாபு.
கடந்த 6-ஆம் தேதி முதல் டெல்லி டெக்ராடன்னில் தமிழ், தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் வேலாயுதம் படத்தை முடிக்காமல் நான் எந்தப்படத்திலும் நடிக்க முடியாது என்றும் உடைகள் மற்றும் ஃஹேர் ஸ்டைல் விவகாரத்தோடு சம்பந்தபடுத்துவது தவறான செய்தி என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இப்போது விஜய் வழியில் மகேஷ்பாவுவும் தெலுங்கு ரீமேக்கில் இருந்து வெளியேறி விட்டதாக நம்பகமான டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு பதிப்பில் மற்ற இரண்டு கதாபாத்திரங்களுக்கு தமிழ்நடிகர்களை தேர்வு செய்திருப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி மகேஷ் பாபு விலகி விட்டதாகத் தெரியவருகிறது.ஆனால் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளுக்கும் சூரியாவையே தேர்வு செய்து விடலாமா என்று யோசித்து வருகிறாராம் ஷங்கர்!
Aucun commentaire:
Enregistrer un commentaire