mercredi 29 décembre 2010

அனல் பறக்கும் சீமான் படப்பிடிப்பு!

சிறை மீண்ட சீமான் ஒருபக்கம் அனல் பறக்கும் அறிக்கைகளை விட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் பட வேலைகளில் செம பிஸியாகி இருக்கிறார். சீமானின் ஐந்து முக்கிய உதவியாளர்கள், சீமான் சிறையில் எழுதி முடித்த திரைக்கதையைப் படித்து விவாதித்துவருகிறார்கள். 

இதற்கிடையில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சீமான் நடித்துவரும் சட்டப்படி குற்றம் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏ.வி.எம் ஸ்டியோவில் நடந்துவருகிறது. இதில் சீமான் வழக்கறிஞர் பாத்திரத்தில் பிரமாதமாக நடித்துவருவதாகத் தகவல் கிடைக்கிறது. ஒவ்வொரு டேக்கிலும் மொத்தப் படக் குழுவும் கைதட்டி  பாராட்டுகிறதாம். அத்தனை சூடாக இருக்கிறது சீமானின் நடிப்பு என்கிறார்கள். 

இந்தப் படத்துக்கு சட்டம் என்ன செய்யும் என்ற தலைப்பையும் இயக்குனர் பதிவு செய்து வைத்திருக்கிறார் என்கிறார்கள். கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பு மாறலாமாம். இந்தப் படத்தில் நடித்து முடிக்கும் சீமான் அடுத்து ராமன் தேடிய சீதை படத்தை இயக்கிய ஜெகன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகே விஜய் நடிக்க இருக்கும் பகலவன் படத்தை இயக்குவார் என்கிறார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...