lundi 28 février 2011

மணிரத்னம் படம்... மகேஷ் பாபு ஒப்பந்தம்!

தெலுங்கின் சூப்பர் ஸ்டார் எனப்படும் மகேஷ் பாபுவை தனது அடுத்த படத்தின் நாயகர்களில் ஒருவராக ஒப்பந்தம் செய்தார் மணிரத்னம். இதனை அதிகாரப்பூர்வமாக மகேஷ்பாபுவே இன்று தெரிவித்துள்ளார்.

விஜய், விக்ரம் மற்றும் விஷாலை இணைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பணிகளில் மும்முரமாக உள்ளார் மணிரத்னம். கல்கியின் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிப்பதை விஜய்யும் விக்ரமும் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்போது மகேஷ் பாபுவை இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

இதுகுறித்து மகேஷ்பாபு தனது ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்-

"மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இப்போது அந்தக் கனவு நிறைவேறப்போகிறது. வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணமாக இதை உணர்கிறேன்", என்று கூறியுள்ளார் மகேஷ் பாபு.

இதற்கிடையே, மகேஷ் பாபுவுக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கும் தொடர்பில்லை என்றும், இந்தப் படம் மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படம் என்றும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்று மணிரத்னம் சொல்வாரா...?

English summary
The big breaking news in south cinema is Mani Ratnam signing Telugu superstar Mahesh Babu to do his next bi-lingual film in Tamil and Telugu. The buzz in Kollywood is that veteran director Mani Ratnam is working on making a period film Ponniyin Selvam with Vijay, Vikram and a third star.




Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...