mardi 23 novembre 2010

காவலன் பற்றி மனம் திறக்கும் வித்தியாசாகர்

விஜய்யின் கூட்டணியில் பல மெகா ஹிட் பாடல்களை தந்தவர் இசையமைப்பாளர் வித்தியாசாகர். தற்போது சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “காவலன்” படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார்.
இது பற்றி வித்தியாசாகரின் மனம்திறந்த மினி பேட்டி :
காவலன் பற்றி ?
வழக்கமான விஜய் படத்தில் இருக்கும் சில அம்சங்களான அறிமுகப்பாடல், குத்துப்பாட்டு என்பன காவலனில் இல்லை. விஜய் படங்களில் “காவலன்” ஒரு மாறுபட்ட படமாகவே இருக்கும். இதில் விஜய் எதார்த்தமான, அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். இது ஒரு வித்தியாசமான காதல் கதை.
இசையினை பொருத்தவரை காவலனில் உங்கள் செயல்பாடு எப்படி?
இதில் மெலடி பாடல்கள் அற்புதமாக வந்துள்ளது. இது விஜய் ரசிகர்களை மட்டும் அன்றி ஏனையவரையும் கவரும். யார் இது… என்னும் பாடல் எனக்கு பிடிக்கும். இப்பாடல் பிடித்ததற்கு பல காரணங்கள் உண்டு. படத்தின் ஹீரோவுக்கு (விஜய்) ஒரு பெண்ணிடம் இருந்து மர்ம தொலைபேசி அழைப்புக்கள் வருகிறது. அப்பெண்ணிடம் விஜய் காதல் வயப்படுகிறார். அப்பெண்ணைத் தேடி விஜய் அலைகிறார். அச்சூழ்நிலையினை விபரிக்கும்பாடல் தான் இது. பாடல்வரிகள் பிரமாதம். இது படத்தின் ஹை லைட் ஆக இருக்கும்.
படத்தில் குத்து பாடல் இல்லை என்பதால் ரசிகர்கள் விரும்புவார்களா ?
நிச்சயமா விரும்புவார்கள், படத்தின் முதல் பாடல் ஒரு திருவிழா பாடல். இது அறிமுகபாடல் போன்றதாக இருக்கும். அத்துடன் குத்து பாடல் இல்லாத குறையை இது நீக்கும். இதில் விஜய் புதுவிதமாக நடித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மேலும் இப்படம் இளம் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும். காவலன் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் வித்தியாசாகர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...