lundi 22 novembre 2010

இளையதளபதி விஜய் ,விஜயகாந்தை எதிர்த்து தேர்தலில் போட்டி? பரபரப்பு பேட்டி!..

இளையதளபதி விஜய் தனக்கு ஏற்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ,காங்கிரஸ் கட்சியில் சேர ,ராகுல் காந்தியை சென்று சந்தித்து பேசிய போது..போ தம்பி வீட்ல யாராவது சின்ன பசங்க இருந்தா கூட்டிட்டு வா.. இது இளைஞர் காங்கிரஸ் என சொல்லி மூக்கை அறுத்து விட்ட்தற்கு பழி வாங்கவும்..குருவியை ஓட விடாமல் செய்த அரசியல் எதிரிகளை பழி வாங்கவும் புதிய கட்சி தொடங்குகிறார்...
வானம் இடி முழங்க...மொட்டை மாடியில் இருந்து ஏரோ பிளேனுக்கு தாவும் காட்சியில் நடித்துக்கொண்டிருந்த இளையதளபதி விஜய் அவர்களை சந்தித்து நல்ல நேரம் பிளாக் சார்பாக பேட்டி கண்டோம்.
வணக்கம் இளையதளபதி...
.
வணக்கங்கண்ணா...
.
’’அண்ணாவா எனக்கு 19 வயசு..அதாவது இளைஞர் காங்கிரசில் சேரும் வயசு..என்னை போய் அண்ணா சொல்றீங்களே...


என்ன நக்கலா...?


’’ச்சே..நான் உங்க ரசிகன்...உங்க படத்தை பார்த்துட்டு தினமும் மொட்டை மாடியில் இருந்து அருக்காணி ஓட்டு வீட்டு மேல தாவுற பயிற்சி எடுத்திருக்கேன்..தலைவா...எனக்கு உங்க பேட்டி வேணும்..’’.

‘’என்னது பெட்டியா ..இன்னும் கட்சியே ஆரம்பிக்கல..அதுக்குள்ள பெட்டியா..இப்பதான் ஈரோடு போனேன்..எனக்கு நானே வரவேற்பு கொடுக்க எங்க டாடி இரண்டு பெட்டி முன்னாடியே அனுப்பி வெச்சாரு..இப்படி மன்றத்துக்கு மன்றம் பெட்டி கேட்டு நச்சரிக்கிறானுங்க....இவனுக தொல்லை தாங்க முடியல...அதனால கட்சி ஆரம்பிச்சு நாமே இனி ஊருக்குள்ள தொழில் அதிபனுங்க..கிட்ட பெட்டி வாங்கலாம்னு பார்க்குறேன்....விஜய்காந்த் சாருக்கு இப்ப நல்ல வசூலாம்..சேலம் மாநாடு னு அறிவிச்சதும் கொண்டு வந்து கொட்டுறாங்களாமே...இன்னிக்கு ஹாட் பிசினஸ் இதான்...டாடி சொன்னாரு.
.
ஆமா உங்க கட்சி பேரு என்ன..கொள்கை என்ன..?

’’அதெல்லாம் டாடிக்குத்தான் தெரியும்...அம்மா நைட் எல்லாம் யோசிச்சு எழுதிகிட்டு இருக்காங்க..அப்பா எல்லா தேர்தல் அறிக்கைகளையும் படிச்சிகிட்டு இருக்காரு...அவங்க பாயிண்ட் எல்லாம் கொடுத்த பின்னாடி நான் மனப்பாடம் பண்ணனும்.’’.
.
’’நீங்க திடீர்னு கட்சி ஆரம்பிச்சால் ஆளுங்கட்சி மறை முகமா மிரட்டுமே....?

‘’நேரிடையாவே ரூம்ல வெச்சு குமுறுனாங்க..அப்புறம் ரெண்டு படம் சும்மாவே நடிச்சு கொடுத்தேன்...கைப்புள்ளையா இருன்னு சொல்லி..தி.மு.க வீக்கா இருக்கிற கோயமுத்தூர்,ஈரோடு தொகுதி,விஜயகாந்தை எதிர்த்து ஓண்ணு..மொத்தமா ஒரு பத்து சீட்,மீதியெல்லாம் இதயத்துல இடம்னு அவங்க கிட்ட பேச்சுவார்த்தை எல்லாம் முடிஞ்சிருச்சு...விஜய் காந்த் சார் அம்மா கட்சி கூட்டணின்னு அறிவிச்சதும் என்னை களத்துல இறக்கி விட்ருவாங்க...பாருங்க...’’

அ..ஆங்....விஜயகாந்தை எதிர்த்து போட்டியா...? நீங்களா..? என்ன தைரியத்துல?அவர் பேச்சு திறமைக்கு முன்னாடி நீங்க எம்மாத்திரம்..அவர் ஈசியா லெஃப்ட் கால்ல உங்களை எத்திடுவாரே..?

‘’ஏன் விஜயகாந்த் எதிர்த்து நான் ஜெயிக்க முடியாதா..? வயசு பொண்ணுங்க,மாமி எல்லாம் எனக்குத்தான் சப்போர்ட்டு...பசங்க எல்லாம் கில்லி மாதிரி எனக்குத்தான் ஓட்டு போடுவாங்க...எங்கப்பா தான் அவரை வளர்த்து விட்டாரு..அவர் வீக் பாயிண்ட் எல்லாம் எங்கப்பாவுக்கு அத்துபடி...நாங்கல்லாம் ஒருதாட்டி முடிவு பண்ணிட்டா...’’.

’’மண்ணை கவ்வாம எந்திரிக்க மாட்டீங்களாக்கும்...’’

’’ம்ம்..என்ன சொன்னீங்க...?’’

‘’இல்ல..ஓட்டு கேட்க போகும்போது ஒரே இரைச்சலா இருக்குமே..சைலன்ஸ்னு கத்தி கத்தி தொண்டை தண்ணியே வத்தி போக போகுது உங்களுக்கு...அதை சொன்னேன்...அப்ப கலைஞரால நீங்க வளர போறீங்க...ஆனா தேர்தல் முடிஞ்சதும் கலைஞர் கட்சியை ரெண்டா,மூணா உடைச்சிருவாரே....?

ம்ம்..அஸ்கு..புஸ்கு...என் கட்சியை எப்படி அவரு உடைக்க முடியும்?

‘’வைகோ வை கேட்டுப் பாருங்க அழுதுகிட்டே சொல்லுவாரு...மொத்தத்துல புலி வாலை அப்பனும்,மவனும் பிடிக்க போறீங்க...புலி எப்ப கவ்வுதோ நாங்க பார்க்கத்தானே போறோம்...!!!

 டிஸ்கி ; விஜய் கட்சி உதயம் என ஜுனியர் விகடன் எழுதி இருந்த கிசு கிசு அடிப்படையில் எழுதப்பட்டது

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...