vendredi 17 décembre 2010

காவலனை எதிர்க்க கூட்டு சேரும் குடும்பம்

எங்களை திட்டமிட்டு ஒழிக்க நடக்கிற சதி’ என்று விரல் நீட்டுகிறார் விஜய். அவர் நீட்டுகிற திசையில் இருக்கிறவர்கள் எல்லாருமே முதல்வர் வீட்டு வாரிசுகள். காவலன் வரும்போது ஆடுகளமும் வரும் என்று கூறிவந்த சினிமா புள்ளிகள், அதற்காகவே படத்தை இன்னும் இன்னும் என்று இழைத்துக் கொண்டிருப்பதாகவும் கொளுத்திப் போட்டார்கள். ஆனால் இப்போது திடீர் பிரேக் போடப்பட்டிருக்கிறதாம் ஆடுகளத்திற்கு.
வருகிற பொங்கல் தினத்தன்று வெளிவரப்போகிறது காவலன். பா.விஜய் நடிக்கிற இளைஞனும் வரப்போகிறது இளைஞனை ரெட் ஜெயண்ட் வெளியிடுவது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று.  ஆனால் இந்த நேரத்தில்தான் ஆடுகளத்தையும் கொண்டுவரப்போவதாக சன் டீவியின் திட்டம். ஆனால் கலைஞரின் படம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஆடுகளத்தை களமிறக்க யோசிக்கிறது சன்டீவி.
எனவே அப்படத்தை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் செய்ய பணித்திருக்கிறார்களாம். அதனால் ஆடுகளத்தை தள்ளி வைத்து காவலனுக்கு எதிராக  இளைஞனை மொத்த குடும்பமும் இணைந்து களத்திற்கு கொண்டு வருகிறார்கள். ஸோ ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளார்கள் கலைஞரின் 75 வது படம் வெற்றி பெற வேண்டும். அதெ நேரத்தில் காவலனைத் தோற்கடிக்க வேண்டும்.
எனவே இப்போதைக்கு ‘ஆடுகளம்’ தள்ளிப்போகலாம். அல்லது ஆடுகளமும், இளைஞனும் சேர்ந்தே காவலனை எதிர்க்கலாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...