விஜய் நடித்த “சுறா” படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு மனிதாபிமான முறையில் பொறுப்பேற்று நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற எங்களது சங்கத்தின் கோரிக்கைகளை இதுவரை விஜய் ஏற்கவில்லை. இதனால் விஜய் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் “காவலன்” மற்றும் புதிய திரைப்படங்களுக்கு தமிழகம் முழுவதும் தொழில் ரீதியாக எந்த ஒத்துழைப்பும் கொடுக்க போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பொங்கலுக்கு “காவலன்” ரிலீசாகவுள்ள நிலையில் மீண்டும் குரல்கொடுத்துள்ளது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.
கல்லூரிகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்க அளித்துள்ளது போல தியேட்டர்களுக்கும் முழு விலக்கு அளித்து திரையரங்கு களின் வளர்ச்சிக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதே போல திரையரங்குகளுக்கு மின் கட்டணத்தையும் குறைத்து வழங்க வேண்டும். இதுதொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரை விரைவில் சந்தித்து பேச உள்ளோம். திரைப்படங்கள் வெளியான 10 நாட்களுக்கு பிறகே கேளிக்கை வரிவிலக்கு சான்றிதழ் கிடைக்கிறது.
தடைகளை தாண்டி காவலன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire